search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி கொலை"

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி, பல் வலிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
    ×